Wednesday, June 25, 2008

கடவுளும் கற்பகமும்

கடவுளும் கற்பகமும்

கற்பகம் எனது பால்ய சிநேகிதி. இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்தோம் ஒரே பள்ளியில் படித்தோம் ஒரே கல்லூரிக்குச் சென்றோம். கற்பகத்துக்கு கடவுள் பக்தி அதிகம். தினம் தோட்டத்திலிருந்து பூக்கள் பறித்து வந்து மாலையாகத தொடுத்து கடவுள் படங்களுக்கு சாத்துவாள். கோயில்களுக்கு தவறாமல் செல்வாள். பக்திப் பாடல்களை விரும்பி கேட்பாள். சினிமாவுக்குப போனால் கூட பக்திப் படங்களுக்குத்தான் போவாள். நான் அப்படி இல்லை. என் அம்மா எப்பொதும் என்னை கோவித்து கொள்வாள் " என்ன இது எப்ப பார்த்தாலும் நாவலும் கையுமா? நாவலை விட்டா ரேடியோவில சினிமா பாட்டு கேக்கறது. இதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்லை. பக்கத்து வீட்டு கற்பகத்தை பாரு என்ன பக்தி என்ன பக்தி".

கற்பகம் படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு திருமணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளை அதே ஊரில் வேலை பார்த்ததால் அவர்களது ஹனிமூன் முடிந்து திரும்பியதும் அவளைப் பார்க்கச் சென்றேன். அவளது வீட்டுக்குள் நுழைந்தவுடன் வரவேற்பரை முழுவதும் சுவாமி படங்களாக இருந்தது. கற்பகம் என்னை வரவேற்று உபசரித்தாள். நான் " என்ன ஹனிமூனை எஞ்சாய் பண்ணீங்களா எங்கெல்லாம் போனேள்?" என்று கேட்டதற்கு அவள் சொன்னாள் " நாங்க பழனி குருவாயூர் மதுரை ராமேஸ்வரம் திருச்செந்தூர் இங்கெல்லாம் போனோம்". அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. "நீங்க போனது ஹனிமூனா இல்லை ஷேத்ராடனமா?" என்றேன் நான். அவள் சிரித்துக் கொண்டே " ஷேத்ராடனம் எல்லாம் இல்லை. அவருக்கும் கடவுள் பக்தி உண்டு. வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால கோயில்களுக்கு போனா நல்லா இருக்கும்னு சொன்னார்". வெகு நேரம் அவளுடன் அளவளாவி விட்டு நான் வீடு திரும்பினேன்.


கற்பகத்துக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து எனக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. என் கணவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்ததால் நானும் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. கிளம்புமுன் கறபகத்திடம் பிரியா விடை பெற்றேன். அமெரிக்கா வந்து ஒரு சில வருடங்களில் அடுத்தடுத்தார் போல இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். இரண்டு பிரசவத்துக்கும் என்னோட பெற்றோர்கள் வந்து ஆறு மாதங்கள் இருந்தனர். கற்பகத்தைப் பற்றி அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கற்பகத்தின் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக காலமானதும் கற்பகத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் அவர்கள் சொல்லித் தெரிஞ்சது.


சில வருடங்களுக்கு பின் இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. பசங்களுக்கு கோடை விடுமுறை வந்ததும் தாத்தா பாட்டியை பார்க்கணுமனு சொன்னவுடன் என்னோட ஹப்பி இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார். அவருக்கு ஆபீஸ்ல லீவு கிடைக்காததால் நான் மட்டும் குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். வந்தவுடன் மறு நாளே கற்பகத்தைப் பார்க்க சென்றேன். கற்பகத்தின் வீட்டிற்குள் நுழைந்த எனக்கு ஒரே அதிர்ச்சி.

கற்பகத்தின் வீட்டு வரவேற்பரையிலிருந்த சுவாமி படங்களைக் காணோம். கற்பகம் மெலிஞ்சு சோகமா காட்சி அளித்தாள். என்னை வா எனறு ஈன சுரத்தில் அழைத்தாள்.

" என்ன ஆச்சு கற்பகம். இங்கே இருந்த சுவாமி படங்கள் எல்லாம் எங்கே?"னு நான் கேட்டேன் அதற்கு அவள் " சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய்." எனறாள். "ஏய் என்ன ஆச்சு உனக்கு இப்படி பேச?" னு நான் கேட்டேன். அவள் உள்ளே சென்று கையோடு அவள் பெண்ணைக் கூட்டி வந்தாள். ஒரு பாவாடை சட்டை போட்ட பெண் மலங்க மலங்க என்னைப் பார்த்தது. நான் " உன் பொண்ணா ஏய் குட்டி என் பேரு என்ன" என்றேன் அந்தப் பெண்ணிடம்.

" அவளால சரியா பேச முடியாது. ஊமை இல்லை. ஆனால் மூளை வளர்ச்சி இல்லை. அதனாலே பேச்சு சரியா வரல்லை. இவளைக் காண்பிக்காத டாக்டர் இல்லை. எல்லோரும் கை விட்டு விட்டார்கள். இவளைப் படச்ச கடவுள் தான் இவளை குணப் படுத்த முடியும்னு சொல்லிட்டா. கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு நாங்கள் போகாத கோயில் இல்லை பண்ணாத பூஜைகள் கிடையாது. இதற்கு நடுவில் ஒரு சில டாக்டர்கள் இவள் பெரியவளாகும்போது கண் பார்வை குறைஞ்சு காதும் மங்கிப் போகலாம்னு சொல்றா.

கற்பகத்தின் வீட்டு வரவேற்பரையிலிருந்த சுவாமி படங்களைக் காணோம். கற்பகம் மெலிஞ்சு சோகமா காட்சி அளித்தாள். என்னை வா எனறு ஈன சுரத்தில் அழைத்தாள்.

" என்ன ஆச்சு கற்பகம். இங்கே இருந்த சுவாமி படங்கள் எல்லாம் எங்கே?"னு நான் கேட்டேன் அதற்கு அவள் " சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய்." எனறாள். "ஏய் என்ன ஆச்சு உனக்கு இப்படி பேச?" னு நான் கேட்டேன். அவள் உள்ளே சென்று கையோடு அவள் பெண்ணைக் கூட்டி வந்தாள். ஒரு பாவாடை சட்டை போட்ட பெண் மலங்க மலங்க என்னைப் பார்த்தது. நான் " உன் பொண்ணா ஏய் குட்டி உன் பேரு என்ன" என்றேன் அந்தப் பெண்ணிடம்.

" அவளால சரியா பேச முடியாது. ஊமை இல்லை. ஆனால் மூளை வளர்ச்சி இல்லை. அதனாலே பேச்சு சரியா வரல்லை. இவளைக் காண்பிக்காத டாக்டர் இல்லை. எல்லோரும் கை விட்டு விட்டார்கள். இவளைப் படச்ச கடவுள் தான் இவளை குணப் படுத்த முடியும்னு சொல்லிட்டா. கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு நாங்கள் போகாத கோயில் இல்லை பண்ணாத பூஜைகள் கிடையாது. இதற்கு நடுவில் ஒரு சில டாக்டர்கள் இவள் பெரியவளாகும்போது கண் பார்வை குறைஞ்சு காதும் மங்கிப் போகலாம்னு சொல்றா.

இவளோட வருங்காலத்தை நினைச்சு எங்களுக்குப் பின்னால இவளை யார் பார்த்துப்பானு நான் குமைஞ்சு போறேன்". இவ்வாறு சொல்லி கற்பகம் என் தோளில் சாய்ஞ்சு அழுதாள். எனக்கும் அழுகையா அழுகையா வந்தது. அழுகையை நிறுத்தி கற்பகம் தொடர்ந்தாள். " இதனாலதான் எனக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சு. நான் சொன்னா தப்பா எடுத்துக்காதே. உனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவா கிடையாது. ஆனால் உனக்கு அமெரிக்காவில சொகுசு வாழ்க்கை மணி மணியா இரண்டு குழந்தைகள். ஆனால் கடவுளையே நினைச்சுண்டு உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பூஜிச்சுண்டிருந்த எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை".

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமாளித்துக் கொண்டு நான் " கற்பகம் உன் நிலைமையைப் பார்த்து எனக்கு சங்கடமாயிருக்கு. கடவுள் நம்பிக்கை நமக்கு கஷ்டம் வரும் போது தைரியத்தையும் சக்தியையும் தர ஒரு பற்றுகோல்னு நான் நம்பறேன். கடவுள் பக்தி அதிகம் இருக்கிறவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அவர் நிச்சயம் தருவார். ஆனால் அதுக்கு முன்னால அவாளை சோதனை பண்ணுவார். இது உனக்கு சோதனைக் காலம். இப்பத் தான் உனக்கு கடவுள் பக்தி அதிகமா தேவைப்படுது. இதெல்லாம் சரி இன்னியிலே இருந்து ஈஸ்வரி என்னொட பொண்ணு. அமெரிக்காவுக்கு நான் இவளை எங்களோடு கூட்டிண்டு போறேன். அங்கே நானும் என் பசங்களும் இவளை நல்லா பார்த்துக்குவோம். என்னோட கணவர் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி பண்றதனால இவளை குண்படுத்த நிச்சயம் ஒரு வழி கண்டு பிடிப்பார். இவளுக்கு குணமானதும் ஒரு நல்ல அழகான அறிவான பொண்ணா உன் முன்னால கொண்டு வந்து நிறுத்துவேன். நீ சந்தோஷமா உன் வாழ்க்கையை திரும்ப ஆரம்பி. பாவம் உன்னோட ஹப்பி. அவர் உங்க ரெண்டு பேரையும் பார்த்து எவ்வளவு மனம் சங்கடப்படறாரோ. அவருக்கு ஆறுதல் சொல்லு." எனறேன்.

கற்பகம் என் கைகளைப் பற்றிக்கொண்டு " கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு இப்ப நான் நிச்சயமா நம்பறேன். அவர்தான் உன் உருவத்தில வந்து ஈஸ்வரிக்கு ஒரு வழி காட்டி இருக்கார். உன்னை மாதிரி ஒரு தோழி கிடைச்சதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லணும். கொஞசம் இரு" என்று சொல்லி உள்ளே சென்று சுவாமி படங்களைக் கொண்டு வந்து மாட்டினாள். விளக்கேற்றி நமஸ்காரம் செய்தாள். ஈஸ்வரியையும் நமஸ்காரம் பண்ண வைத்து அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். கனத்த மனத்துடன் நான் அவளிடமிருந்து விடை பெற்று ஈஸ்வரியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன்.

No comments: