Monday, December 3, 2007

My Tamil Poems-3

கண்களே என் இனியவளை
காணச் செய்ததற்கு நன்றி

காதுகளே அவளின் கிளிப்பேச்சை
கேட்க வைத்தற்கு நன்றி

கால்களே என்னை அவளிடம்
அழைத்துச் சென்றதற்கு நன்றி

கைகளே அவளுக்கு மலர் செண்டு
கொடுத்தற்கு நன்றி

அறிவே உனக்கு மட்டும் என்
நன்றி கிடையாது
ஏனென்றால் நீ அடிக்கடி
'பெண்களை நம்பாதே' என்று
தொல்லை கொடுப்பதால்

_______________________________________


வெற்றியை இலக்காகக் கொண்டு
ஓடுபவர் பலர்

வெற்றி வாகை சூடப்
பிறந்தவர் சிலர்

வெற்றிக் கனியை
தட்டிப் பறிப்பவர் சிலர்

எனது வெற்றியோ
நீ சிந்தும் புன்னகையே

______________________________________

தினமும் காலையில் ஒளி வெள்ளமாய்
உதிக்கும் ஆதவனைப் போல் உதித்த
எனது கவிதை எங்கே ?

குளிர் நாட்டில் ஆதவனை மறைத்த
கார் மேகங்களில் மறைந்து விட்டதா?

பீறிட்டு வெளி வரும் ஊற்றுக்கண் போல்
வெளிவந்த எனது கவிதை எங்கே ?

இங்கு உள்ள வெந்நீர் ஊற்றுக்களின்
வெப்பத்தில் மடிந்து விட்டதா?

கவிதையை எழுதி ஒரு குழந்தயைப்
பெற்ற தாய் போல் மகிழ்ந்தேனே
எங்கே எனது கவிதை?

குழந்தை காணாமல் போய் விட்டது
எனது கவிதை நின்று விட்டது

______________________________________

எங்கிருந்தோ வந்தாய்
என்னைக் கவர்ந்தாய்
என் உளம் புகுந்தாய்
எங்கேயோ மறைந்தாய்
என்னைத் தவிக்கவிட்டு

நீ சொர்க்கத்தில் இருப்பதாக
கூறுகிறார்கள்
நீ இல்லாமல் நரகத்தில்
வாடும் என்னை
எப்போது அழைக்கப் போகிறாய்?

வீரனாக இருந்திருந்தால்
உடன்கட்டை ஏறியிருப்பேன்
உன்னுடன்
கோழையாகப் போனதனால்
வெறும் கட்டையாக வாழ்கிறேன்
_________________________________________________
உன்னைத் தொட்ட தென்றல்
என்னைத் தொடவில்லை


உன்னைத் தீண்டிய கடலலைகள்
என்னைத் தீண்டவில்லை

உன்னை வருடிய இளங் காற்று
என்னை வருடவில்லை

உன் நினைவில் நான்
விண் வெளியில் மிதப்பதால்
------------------------------------------------------------------------
எப்படி உன்னை வருணிப்பேன்?

உன்னை தங்கச் சிலை என்றால்
அயல் நாட்டிற்கு கடத்திவிடுவார்களோ?

உன்னை அலங்காரத் தேர் என்றால்
யாராவது இழுத்துச் சென்றுவிடுவார்களோ?

உன்னை முல்லைக் கொடி என்றால்
உனக்கு வேலி இட்டு விடுவார்களோ?

உன்னை புள்ளி மான் எனறால்
உன்னை வேட்டையாடி விடுவார்களோ?

உன்னை மோனாலிசா என்றால்
சித்திரமாய் தொங்கவிடுவார்களோ?

-------------------------------------------------------------------------
உன் நினைவே ஒரு சங்கீதம்
இன்று அந்த சங்கீதத்தில்
ஏன் இத்தனை அபசுரம்?

உன் நினைவே ஒரு கவிதை
இன்று அந்த கவிதையில்
ஏன் இத்தனை பிழைகள்?

உன் நினைவே ஒரு நாடகம்
இன்று அந்த நாடகத்தில்
திரை போடப்பட்டது ஏன்?

உன் நினைவே ஒரு காவியம்
இன்று அந்த காவியம்
சோகக் காவியம் ஆனது ஏன்?

-----------------------------------------------------------------------
என்னை பிரிய மாட்டேன் எனறு
நீ விட்ட கண்ணீர் துளிகள்

நீ என்னை விட்டு பிரிந்ததால்
நான் விடும் கண்ணீர் துளிகள்

ஆனந்த கடலில் சங்கமிக்கும்
நாம் இருவரும் இணைந்தால்

----------------------------------------------------------------------
குழியில் விழுந்துவிட்டேன்
நீ சிரிக்கும்போது உன்
கன்னத்தில் விழும் குழியில்

விழியில் விழுந்து விட்டேன்
கவிதைகள் பல சொல்லும்
அழகான உன் விழியில்

பழியில் விழுந்து விட்டேன்
உன் வாழ்க்கையை கெடுத்ததாக
என் மீது நீ போட்ட பழியில்
________________________________________________________

தமிழின் பெருமை

Posted 24th November 2007 at 09:26 AM by Tamildownunder
காளமேகப் புலவர் பசித்த வயிற்றுடன் நாகப்பட்டினம் நகரில் இருந்த
காத்தன் என்பவனின் சத்திரத்துக்குப் போனாராம். ஆனால் அங்கே
மாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்
அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது
பின்வருமாறு பாடினாராம்.

"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்."

"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்
வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து
அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது
பொழுது விடிந்து விடும்"

என்று பொருள் தொனிக்க பாடியதைக்
கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.
அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.
இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை
மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.
ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.

அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்
சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.

கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !

Nanri: Vinu
____________________________________________________________________________________________________________________
நமது கண்ணோடு கண் நோக்கின்
நமக்கு வாய்ச் சொல் எதற்கு?
உன் பெற்றோரின் வசைச் சொல்லும் எதற்கு?

ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி

திரையரங்கின் வெளியே மழை
உள்ளே திரையிலும் ஒரே மழை
ஓடிக்கொண்டிருக்கிறது பழைய படம்

பேருந்து நிலையத்தில்
மறைந்தது மலர்த் தோட்டம்
--மகளிர் பேருந்து சென்றவுடன்

பெண்கள் முன்னால்
குனிந்த தலை நிமிர மாட்டான்
-- குட்டை பாவாடையில் பெண்கள்

வேலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிட்டதில்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது-போலீஸாக

வெள்ளம்- தமிழ்நாட்டில் பெருமழை பெய்தால்
வெள்ளம்-கேரளாவில்
சிறுமழை தூறினாலே
__________________________________________________________________________________________________________________

My Tamil Poems

Posted 22nd November 2007 at 11:21 PM by Tamildownunder
Updated 23rd November 2007 at 08:40 AM by Tamildownunder
நீ இல்லாமல் நான்....

அச்சாணி கழன்ற மாட்டுவண்டி
தண்டவாளம் இல்லாத ரயில்
தரை தடடிய கப்பல்
என்ஜின் இல்லாத பேருந்து
எரிபொருள் இல்லாத ஏவுகணை
பறக்க முடியாத விமானம்

நீ இல்லாமல் நான்.......

வசனம் பேசத்தெரியாத சிவாஜி கணேசன்
வாள் வீசத் தெரியாத எம்ஜியார்
காதலிக்கத் தெரியாத ஜெமினி கணேசன்
ஸ்டைல் பண்ணத் தெரியாத ரஜனி காந்த்
டான்ஸ் ஆடத் தெரியாத கமல ஹாஸன்
நடிக்கத் தெரியாத விக்ரம்
கில்லி அடிக்கத் தெரியாத விஜய்
வரலாறு தெரியாத அஜீத்
ஜில் என்று காதலிக்காத சூர்யா
வம்பு செய்யத் தெரியாத சிம்பு
நகைச்சுவை பண்ணத்தெரியாத விவேக்
கணிணியில் இசை அமைக்கத் தெரியாத ரெஹமான்
வார்த்தை கிடைக்காமல் வதைபடும் வாலி

நீ இல்லாமல் நான்.......

முற்றின வெண்டைக்காய்
சூம்பிய கத்தரிக்காய்
அழுகிய தக்காளி
பழுத்த பாகற்காய்
வெதும்பிய வாழைக்காய்
காரலான சேனைக் கிழங்கு
முளை விட்ட உருளைக் கிழங்கு

நீ இல்லாமல் நான்.......

சிதைந்த ஓவியம்
உடைந்த சிலை
கலைந்த கோலம்
எழுதாத வெள்ளை காகிதம்
அபசுரமான சங்கீதம்

நீ இல்லாமல் நான்.......

சர்க்கரை போடாத காபி
உப்பு இல்லாத உப்புமா
அரை வேக்காட்டுச் சோறு
வேகாத பருப்பு
கருகின தோசை
கல்லு மாதிரியான இட்லி
வெண்டைக்காய் விளக்கெண்ணெய்
சோற்றுக்கற்றாளை சேர்ந்த அவியல்
பத்திய சாப்பாடு
_________________________________________________________________________________________________________________--

Between London, Melbourne and Washington - 3

Posted 15th November 2007 at 01:48 PM by Tamildownunder
Hindu religious activities are strong in London. I used to think that the London based Hindus are more religious than Hindus in India. There are about 10 to 12 temples in and around London. The biggest of them is the Lakshmi-Narayan Mandir at Nesden in North London. When I first visited that temple I was awe-struck. They showed a video of how the temple was built. They showed that ~1000 marble stones from Europe were procured and sent to Gujarath and the carvings on them got done. They had numbered the stones and upon their arrival in London about 1000 volunteers built the temple stacking the numbered stones in their order. The temple is one of the big tourist attractions in London and is featured in all the tourist brochures. Almost all the leading personalities in the world have visited the temple like the British Queen, PMs of several countries and others.

Among the other temples, the Ganapathy temple at Wimbledon is very famous. It is said that the statue of Ganapathy appeared on the spot where the temple is there (suambu it is called). This and few other temples like the Kanaka Durgai Amman temple at Ealing, are mostly patronised by Sri Lankan Tamils. In the months of July/August big ther festivals are performed and to witness that people from all over Europe also are coming.



I was lucky to visit all the temples in London due to an activity undertaken by my first landlady a Sri lankan Tamil who is a big devotee of Swami Gyananda Giri and Swami Haridos Giri from Thennangur near Chennai, India. In 2004 beginning the Gyananada Giri Peedam brought out a video cassette of a movie on Purandaradasar. The speciality of the movie is that it was choreographed, directed by Swami Haridos Giri and acted by only girls aged from 5 to 15. This film won the President's award in mid-80's. It is a movie worth seeing. The landlady, Mrs. Rani Kanakanayagam wanted to show the movie to all children and we hired a projector, screen etc., fixed dates and timings at the temples and went and showed. It was a great success and I could visit all temples like the Balaji temple in East Ham, Murugan Temple there also and others. I used to give an introductory speech about the movie.

You can get the details of the film and its availability at http://www.thennangur.com/Purandhara.htm
___________________________________________________________________________________________________________________

Me and IL

Posted 16th November 2007 at 09:21 AM by Tamildownunder
I was lonely so lonely
Lonely with a big L

I surfed the net and found IL
IL with a big I and a big L
(I for interesting and L for lovely)

I got in IL appreciation for my poems
Appreciation with a big A
(A for administrators, A for A-Z members)

I found in IL good company
Company with a big C
(C for Cheeniya, ChitVish and others)

I found friendship beyond genders in IL
Friendship with a big F

I found in IL knowledge in everything
Knowledge with a big K

I found in IL solace through my stories
Solace with a big S

In all, I find life in IL
Life with a big L

No comments: